என்னைப் பாதித்ததில் இதுவும் ஒன்று.....!
"கரோல் வோய்டிலா" என்ற இயற்பெயரைக் கொண்ட திருத்தந்தை இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் அவர்கள் 18.05.1920 இல் போலந்திலுள்ள வாடோவிச் என்னுமிடத்தில் பிறந்தார். 1946 நவம்பரில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட அவர், 1958 செப்ரெம்பரில் கிராக்கோ மறைமாவட்டத்தி;ன் துணை ஆயராகவும், அதனைத்தொடர்ந்து 1963ல் அம்மறைமாவட்டத்தின் பேராயராகவும், பின்னர் 1967 மே 29ல் கர்தினாலாகவும் பணிநிலை உயர்த்தப்பட்டார். திருத்தந்தை முதலாம் யோவான் பவுலின் மறைவிற்குப் பின்னர் கத்தோலிக்க திருச்சபையின் முதலாவது பாப்பரசரான புனித இராயப்பரைத் தெடர்ந்துவரும் 264வது பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தையாகியதன் பின்னர் தனக்கு முன்னர் பாப்பரசராக இருந்து மறைந்த முதலாம் யோவான் பவுலின் நாமத்தை தனக்கும் சூட்டிக்கொண்டு இரண்டாம் யோவான் பவுல் எனத் தன்பெயரை மாற்றிக்கொண்டார். 1978 ஒக்ரோபர் 16ல் ரோமிலுள்ள புனித இராயப்பர் பேராலயத்தில் நான்கு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் மத்தியில் தனது திருப்பணியை ஆரம்பித்த திருத்தந்தை அவர்கள் அன்றுமுதல் தனது கண்ணியம் மிக்க வழிநடத்தலால் திருச்சபையை நேரிய வழியில் நடத்தி வந்தார். இக்காலத்தில் அவர் மேற்கொண்ட பல முன்னுதாரணமான முயற்சிகளும், செயற்பாடுகளும் மதங்களைக் கடந்து, மொழிகளைக் கடந்து, இனங்களைக் கடந்து உலக மக்கள் அனைவராலும் மதிக்கப்படும், அன்புசெய்யப்படும், தலைவராக அவரை ஆக்கியது.
இந்த மதிப்பும் நேசிப்பும் எத்தகையதாக இருந்தது என்பதற்கு 03.04.2005 சனிக்கிழமை தனது 85வது வயதில் அவர் மறைந்தபோது உலகெங்கிலும் இருந்து சிந்தப்பட்ட கண்ணீர்த் துளிகளும், 08.07.2005ல் இடம்பெற்ற அவரது இறுதி நல்லடக்க நிகழ்வின்போது குழுமிநின்ற லட்சக்கணக்கான மக்கள் சமுத்திரம் சாட்சியாக விளங்குகின்றன. உலகில் கடந்த 40 ஆண்டுகளில் நடைபெற்ற முக்கிய பிரமுகர்களின் மரணச்சடங்குகளில் மிகப்பெரிய இறுதி நல்லடக்க ஆராதனை நிகழ்வாக திருத்தந்தை அவர்களின் மரணச்சடங்கு வரலாற்றில் பதிவாகியது.
திருத்தந்தை இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் அவர்களின் மறைவுக்குப் பின்னர் புதிய திருத்தந்தையாக ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஜோசப் ரட்சிங்கர் அவர்கள் தனது 78வது வயதில் 19.04.2005 தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாப்பரசராகிய பின்னர் 16ம் ஆசீர்வாதப்பர் எனத் தனக்குப் பெயர் சூட்டிக்கொண்டுள்ள புதிய திருத்தந்தை அவர்கள் கத்தோலிக்க திருச்சபையில் புனித இராயப்பரை தொடர்ந்து வரும் 265வது பாப்பரசர் ஆவர். புதிய பெயரைச் சூட்டிக்கொண்ட பின்னர் அது தொடர்பாக திருத்தந்தை அவர்கள் குறிப்பிடுகையில்இ முதலாவது உலகப்போரின் போது உலக அமைதிக்காக ஓயாதுஇ அயராது போராடியவர் திருத்தந்தை 15ம் ஆசீர்வாதப்பர் ஆவார். அவரது அமைதி முயற்ச்சிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையிலேயே எனது புதிய பெயராக அவரது பெயரைத் தெரிவு செய்தேன் என்றார்.
1927இல் ஜேர்மனியில் பிறந்த புதிய திருத்தத்தை 1951 ஜூன் 29 இல் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 1977 மே 28இல் மியூனிக் நகர பேராயராக நியமிக்கப்பட்டார்;. தொடர்ந்து 1977 ஜுன் 27இல் அப்போதைய தி
